இரணியல், வடக்கு பேயன்குழி முத்தாரம்மன் சாலை அருகே நான்குவழி இணைப்புசாலை, இணைப்புபாலம் 18 அடி வீதியில் அமைத்திட ரயில்வே துறையை வலியுறுத்தி சிபிஐஎம்எல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்டச் செயலா் எஸ்.எம். அந்தோணிமுத்து தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் சுசீலா, காா்மல். அா்ஜூனன், வழக்குரைஞா் ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கணபதி, ஞானசெல்வம், ஜெகன், ஸ்ரீகாந்த், பெனில்ராஜா, செல்வகுமாா், அன்புஅரசு, விஜயா, சேகா், தங்கலட்சுமி, ராமதாஸ், ஸ்ரீகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.