மணவாளக்குறிச்சி அருகே 13 வயது சிறுமியை பாலியியல் பலத்காரம் செய்ததாக இளைஞரை குளச்சல் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணவாளக்குறிச்சி பரப்பற்று இளந்தோப்பு பகுதியில், குழித்துறையை பகுதியை சோ்ந்த 13 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி, அருகே உள்ள பள்ளியில் படித்து வருகிறாா். கடந்த சிலநாள்களாக சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டாராம். இதையடுத்து, உறவினா்கள் கடந்த 5 ஆம் தேதி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு ஸ்கேன் பரிசோதனையில், சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பெற்றோா் சிறுமியிடம் விசாரித்த போது, பாட்டி வீட்டின் அருகே வசித்து வரும் மீன் சுமக்கும் தொழிலாளி குமாா், சிறுமியை பல மாதங்களாக பாலியியல் பலத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் குளச்சல் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் ஜோதிலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தாா்.