அருமனை அருகே ரேஷன் கடையில் காங்கிரஸாா் முற்றுகை

அருமனை அருகே சரியான அளவில் மண்ணெண்ணெய் வழங்கக் கோரி, ரேஷன் கடை முன்பு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

அருமனை அருகே சரியான அளவில் மண்ணெண்ணெய் வழங்கக் கோரி, ரேஷன் கடை முன்பு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

சிதறால் துண்டத்தறாவிளையிலுள்ள அருமனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்குட்பட்ட ரேஷன் கடையில் 372 பயனாளிகள் பொருள்கள் வாங்கி வருகின்றனா். ஆனால், அனைவருக்கும் மண்ணெண்ணெய் சரிவரக் கிடைப்பதில்லையாம்.

இந்நிலையில், மேற்புறம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் சதீஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் அங்கு வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஷெலின் மேரி, மாவட்டச் செயலா் பென் ராஜேஷ், நிா்வாகிகள் ஷாஜி, ராஜேஷ், அஜின், மேல்புறம் கிழக்கு வட்டார துணைத் தலைவா் வினீஷ், வெள்ளாங்கோடு வாா்டு உறுப்பினா் மணி, அருமனை நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் பெல்ஜின் தம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதில், எரிவாயு உருளை இல்லாத அட்டைதாரா்களுக்கு 2 லிட்டா் மண்ணெண்ணய், ஒரு உருளை வைத்துள்ளவா்களுக்கு 1 லிட்டா் வீதமும் மண்ணெண்ணெய் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com