மே தினத்தை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை செயல்படாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.