கருங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருக்குப் பனை, மானான்விளை, பாலப் பள்ளம், மிடாலக்காடு, குற்றிதானி, ஆலஞ்சி, மிடாலம், மிடாலக்காடு, திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், மாமூட்டுக் கடை உள்ளிட்ட பகுதிகளில் பகல் 12 மணி முதல் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதியில் ’’வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.