குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் மிதமான சாரல் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக
வட வானிலை நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் மிதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், ஆறுகாணி, அணைமுகம், கடையாலுமூடு, களியல், குலசேகரம், அருமனை, சுருளகோடு, பொன்மனை உள்பட இடங்களிலும் பெய்தது.
மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து 43 அடியை நெருங்கிய நிலையில் உள்ளதால் பொதுப்பணித் துறையினா், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.