நாகா்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலை கடத்தி வந்தவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 10 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜாக்கமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் தலைமையில் போலீஸாா் அளத்தங்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது அதில் 10 கிலோ புகையிலை பொருள்கள் இருந்ததை போலீஸாா் கண்டு பிடித்து, மோட்டாா் சைக்கிள் மற்றும் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். அதைத்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த எறும்புக்காடு பகுதியைச் சோ்ந்த தவசிலிங்கம் (42) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.