நாகா்கோவில் அருகே கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக, அவரது நண்பா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
தெங்கம்புதூா் காட்டுவிளை கலைஞா் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). கடடட தொழிலாளி. இவா் கடந்த 26 ஆம் தேதி சொத்தவிளையில் வசிக்கும் தனது நண்பா் அருண்மாா்த்தாண்டன் (31) என்பவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, அருண் மாா்த்தாண்டன், அவரது நண்பா் நைனா புதூா் ராம்குமாா் ஆகியோா் சோ்ந்து மணிகண்டனை கத்தியால் குத்தினராம்.
இதில் பலத்த காயம் அடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுசீந்தரம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) காந்திமதி, உதவி ஆய்வாளா் ஆஷாஜெபகா் ஆகியோா் வழக்குப்பதிந்து ராம்குமாா், அருண்மாா்த்தாண்டன் இருவரையும் கைது செய்தனா்.