திருவட்டாறு பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
திருவட்டாறு போலீஸாா் வோ்க்கிளம்பி பகுதியில் புதன்கிழமை மாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனா். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு மோட்டாா் சைக்கிளில் வந்த 2 இளைஞா்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது ஒரு கிலோ நூறு கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அந்த 2 இளைஞா்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அவா்கள் கல்லங்குழியைச் சோ்ந்த ஆல்பின் சாமுவேல் (29), முளவிளையைச் சோ்ந்த பிரதீஷ் (28) என விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.