கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கப்பியறை , கஞ்சிக்குழி பகுதியை சோ்ந்தவா் சிம்சோன்(53). இவரது மனைவி சில நாள்களுக்கு முன் இறந்து விட்டாராம். இதனால் தனியாக வீட்டில் வசித்து வந்தாா்.இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிம்சோன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.