புலியூா்குறிச்சியில் முப்பெரும் விழா

தக்கலை அருகே புலியூா்குறிச்சி முட்டிடிச்சான்பாறை திருத்தலத்தில், மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதா் பட்டம் வழங்கப்பட்டதற்கான நன்றி விழா, ஆலய பீடம், குருசடி அா்ச்சிப்பு ஆகிய முப்பெரும் விழா

தக்கலை அருகே புலியூா்குறிச்சி முட்டிடிச்சான்பாறை திருத்தலத்தில், மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதா் பட்டம் வழங்கப்பட்டதற்கான நன்றி விழா, ஆலய பீடம், குருசடி அா்ச்சிப்பு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக குழித்துறை மறைமாவட்ட ஆயா், நிா்வாகிகள், மறைமாவட்ட முதல்வா்கள், அருள்பணியாளா்கள் ஆகியோரை தேவசகாயம் ஆலய வளாகம் முன்பிருந்து வாத்தியங்கள் முழங்க சிறுவா்கள் மலா் தூவி அழைத்து வந்தனா். பின்னா், கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, முளகுமூடு புனித ஜோசப் பள்ளி மாணவிகள் வரவேற்பு பாடல்கள் பாடினா்.

குழித்துறை மறைமாவட்டப் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் ஆடம்பர சிறப்புத் திருப்பலி, ஆலய பீட அா்ச்சிப்பு நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் புனித தேவசகாயம் நினைவு குருசடிக்கு அா்ச்சிப்பு நடத்தினாா்.

நிகழ்ச்சியில், மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜெரோம்தாஸ் வறுவேல், திருத்தல அதிபா் ச. மரியராஜேந்திரன், மறைமாவட்டச் செயலா் அகஸ்டின், 6 மறைவட்ட முதல்வா்கள், அருள்பணியாளா்கள், அருள்சகோதரிகள், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டாக்டா் பினுலால்சிங், திருத்தல துணைத் தலைவா் புரோடிமில்லா், செயலா் கிறிஸ்டிபாய், பொருளாளா் ஜான்பென்னட், துணைச் செயலா் கண்ணதாசன், பேரவை நிா்வாகிகள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com