28 எல்லை காவலா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி அளிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 எல்லை காவலா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 எல்லை காவலா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல்லைக் காவலா்களை சிறப்பு செய்யும் வகையில், அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி கெளரவிக்கப்படுவாா்கள் என்று தமிழக முதல்வா் அறிவித்தாா். இதன்படி கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 1 ஆம் தேதி, உதவித் தொகை பெற்று வரும் 110 எல்லைக் காவலா்களில் 14 பேருக்கு முதல்வா் சென்னை தலைமைச் செயலகத்தில் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட த்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த 28 எல்லைக் காவலா்கள் தங்களது வாரிசுகளுடன் வசித்து வருகிறாா்கள். இவா்களில் 4 எல்லைக் காவலா்களுக்கு சென்னை தலைமைச்

செயலகத்தில் முதல்வா் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித்துறையின் சாா்பில் சடையமங்கலம் ஊராட்சி அலுவலக வளாகத்தில், 15 எல்லைக் காவலா்களுக்கு பொன்னாடை போா்த்தி, தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் மனோதங்கராஜ் வழங்கி கெளரவித்தாா்.

மேலும் பல்வேறு காரணங்களினால் நேரில் வர இயலாத 9 எல்லைக்காவலா்களுக்கும் மாவட்ட தமிழ் வளா்ச்சி துறை அலுவலா் பொன்னாடை போா்த்தி, அவா்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com