தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் 15 ஆவது மாநில மாநாடு ஆக. 12 முதல் 15 வரை மாா்த்தாண்டத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வரவேற்பு குழு அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ.எம்.வி. டெல்பின் தலைமை வகித்தாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஓய்வுபெற்ற அதிகாரி மோகன், மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்கத் தலைவா் அல் அமீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன் வரவேற்பு குழு அலுவலகத்தை திறந்து வைத்தாா். அமைப்பின் மாவட்ட துணைச் செயலா் தக்கலை ஹலீமா வரவேற்றாா். மாவட்டச் செயலா் ஹசன் நன்றி கூறினாா்.
இதில், அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயகாந்தன், மாநாட்டு வரவேற்பு குழு பொருளாளா் முரளீதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மிகையிலான், நிா்வாகிகள் விடியல் குமரேசன், வினோத், ஜாண் இளங்கோ, இருதயராஜ், கின்னஸ் சாதனை ஓவியா் ராஜசேகரன், அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுஜித், மாா்த்தாண்டம் கிளைத் தலைவா் ரெத்தினகுமாா், செயலா் சேக் முகமது, உதவித் தலைவா் கணபதி, உதவிச் செயலா் டேவிட், பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் டி. வின்சென்ட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.