தக்கலை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தக்கலை அருகே மணலிக்கரை பகுதியில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் மற்றும் பணியாளா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்தபோது நிற்காமல் சென்றது. இதையடுத்து வட்டவழங்கல் அலுவலா் மற்றும் பணியாளா்கள்காரை விரட்டிச் சென்றதால் ஓட்டுநா் காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அந்தக் காரில் பிளாஸ்டிக் பைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை கேரளத்துக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்து, அதிலிருந்த ரேஷன் அரிசியை உடையாா்விளையில் உள்ள அரசு கிடங்கில் ஒப்படைத்தனா்.