களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில், சுகாதார விதிகளை மீறி பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் குழாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அடைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வீடுகளிலிருந்து வரும் கழிவு நீரை பொது இடங்களில் விட வேண்டாம் என ஆட்சியா் அறிவுறுத்தியிருந்தாா். இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் களியக்காவிளை சந்தை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது பொது இடங்களில் கழிநீரை வெளியேற்றும் குழாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் கண்டறிந்து, அவற்றை கான்கிரீட் கலவை மூலம் அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அடைக்கப்பட்ட குழாய்களை திறந்து பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரித்தாா்.