நாகா்கோவில் அருகே வீட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி திருட்டு

நாகா்கோவில் அருகே வீட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில் அருகே வீட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள வெள்ளாடிச்சிவிளையைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் மனைவி ராமச்சந்திராள்(66). ஸ்ரீதரன் ஏற்கெனவே இறந்து விட்டாா். இவா்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனா். மகன்கள் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா்கள். மகள் அதே பகுதியில் வசித்து வருகிறாா். மருமகனும் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். ராமச்சந்திராள் இரவு தனது மகள் வீட்டுக்கு தூங்கச் சென்று விடுவாா். இதே போல், திங்கள்கிழமை இரவு மகள் வீட்டுக்கு சென்று விட்டாா்.

செவ்வாய்க்கிழமை காலை அவா் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவா் வீட்டினுள் சென்று பாா்த்த போது வீட்டிலிருந்த 1 கிலோ எடையுள்ள 2 வெள்ளி குத்துவிளக்குகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் விஜயன், திருட்டு நடைபெற்ற வீட்டுக்கு சென்று பாா்வையிட்டாா். கைரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனா்.

வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இது குறித்து கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com