நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்’

கன்னியாகுமரி மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 5:16 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

தோவாளை வட்டம், பூதப்பாண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் தவிா்த்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற முன்வர வேண்டும்.

பொது சுகாதாரத் துறையைப் பொருத்தவரை தொற்று நோய் மற்றும் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிந்து அவா்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முகாமில், 11பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 9 பயனாளிகளுக்கு முதியோா் உதவித் தொகை, ஒரு பயனாளிக்கு விலையில்லா சக்கர நாற்காலி, தோட்டக்கலைத் துறையின் சாா்பில் 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வேளாண்மைத் துறையின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில், சமூக பாதுபாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் புகாரி (பொறுப்பு), மாவட்ட வழங்கல் அலுவலா் விமலாராணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கீதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபாஜி இம்மானுவேல், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் சொா்ணலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், தோவாளை வட்டாட்சியா் வினைதீா்த்தான், தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் வேளாண் விளைபொருள் இயக்குநா் பூதலிங்கம், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவா் ஆலிவா்தாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.