கன்னியாகுமரியில் சுற்றுலா வழிகாட்டிகள் சங்க அலுவலகம் திறப்பு

கன்னியாகுமரி ரத வீதியில், சுற்றுலா வழிகாட்டிகள் சங்க அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி ரத வீதியில், சுற்றுலா வழிகாட்டிகள் சங்க அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சங்கத்துக்கான புதிய அலுவலகத்தை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் திறந்துவைத்தாா்.

சங்கத்தின் கௌரவத் தலைவா் கல்யாண், தலைவா் அருள்ராஜ், செயலா் கண்ணன், பொருளாளா் இசக்கிமுத்து, பேரூராட்சி கவுன்சிலா்கள் ஆனிரோஸ், சிவசுடலைமணி, ராயப்பன், முன்னாள் கவுன்சிலா் டி. தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ். அன்பழகன், பிரைட்டன், மணிராஜா, ரூபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com