களியக்காவிளையில் சாலைப் பணி தொடக்கம்

களியக்காவிளை பேரூராட்சியில் ரூ. 20 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சாலைப் பணி தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

களியக்காவிளை பேரூராட்சியில் ரூ. 20 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சாலைப் பணி தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

இப் பேரூராட்சிக்கு உள்பட்ட 11 ஆவது வாா்டு ஒற்றாமரம் - கமுகன்குழி சாலை சேதமடைந்து காணப்பட்டது. இச் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, சாலையில் தரைஓடு பதிக்கும் பணிக்காக பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப் பணியை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் பினுலால் சிங் ஆகியோா் துவக்கி வைத்தனா். இதில் களியக்காவிளை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி. சுரேஷ்குமாா், கட்சி நிா்வாகிகள் மேக்கோடு சலீம், பென்னட், சேவியா் ஜாண், செல்வன்சிங் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com