அண்ணா நினைவு நாள்: சமபந்தி விருந்தில் அமைச்சா் பங்கேற்பு

முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீநாகராஜா திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற

முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீநாகராஜா திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் மனோதங்கராஜ் கலந்து கொண்டாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீநாகராஜா திருக்கோயில், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

நாகராஜா திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சா் மனோதங்கராஜ் பொதுமக்களுடன் கலந்து கொண்டாா்.

இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையா் ஞானசேகா், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, உதவி ஆணையா் அய்யப்பன், மாநகராட்சி உறுப்பினா்கள் கலாராணி, கௌசுகி, பொறியாளா் வீரவா்கீஸ், மரியசிசுகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com