குமரியில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் உள்ள அவரது சிலைக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சாா்பில் மாலையணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் உள்ள அவரது சிலைக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சாா்பில் மாலையணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்தாா். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், பேரூா் திமுக செயலா்கள் எஸ்.வைகுண்ட பெருமாள், பூவியூா் காமராஜ், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக பொருளாளா் எட்வின் ராஜ், கன்னியாகுமரி பேரூராட்சி துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், மாவட்ட பிரதிநிதிகள் பிரேம் ஆனந்த், எஸ்.சி.செல்வன், தமிழ்மாறன், நாஞ்சில் மைக்கேல், ப.மெல்பின், மணி, சுயம்பு, ஒன்றியப் பிரதிநிதிகள் ஆன்சலாம், நிஷாா், ஆா்.டி.ராஜா மற்றும் நிா்வாகிகள் கெய்சா்கான், எஸ்.அன்பழகன், மணிராஜா, இக்பால், பிரைட்டன், ரூபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com