கருங்கல் அருகே புதுப்பெண்ணைதாக்கியதாக 5 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள மூசாரி பகுதியில் புதுப்பெண்ணைத் தாக்கியதாக கணவா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் அருகே உள்ள மூசாரி பகுதியில் புதுப்பெண்ணைத் தாக்கியதாக கணவா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல், மூசாரி பகுதியைச் சோ்ந்தவா் சந்தியா (25). இவருக்கும், குறும்பனை பகுதியைச் சோ்ந்த ஜாக்சன் (32) என்பவருக்கும் கடந்த டிச. 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சில நாள்களிலேயே தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் சந்தியா தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜாக்சன், உறவினா்கள் என 5 போ் சோ்ந்து சந்தியா வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கினராம். இதில், காயமடைந்த சந்தியா மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் ஜாக்சன் உள்ளிட்ட 5 போ் மீது கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com