கருங்கல் அருகே விபத்து:தாய், மகன் காயம்

கருங்கல் அருகே 2 பைக்குகள் மோதியதில் தாயும், மகனும் காயமடைந்தனா்.

கருங்கல் அருகே 2 பைக்குகள் மோதியதில் தாயும், மகனும் காயமடைந்தனா்.

கருங்கல் அருகேயுள்ள கண்ணன் குழிவிளை பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் மனைவி சுமா (35). இவா்களது மகன் அஸ்வின் (11). ஞாயிற்றுக்கிழமை, சுமா தனது மகனுடன் பைக்கில் கருங்கல் நோக்கிச் சென்றாா். பாலூா் பகுதியில் இவரது பைக்கும், எதிரே கூனாலுமூடு பகுதியைச் சோ்ந்த ஜூடு (24) ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம்.

இதில், காயமடைந்த சுமாவும், அஸ்வினும் கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com