சாலையில் மயங்கி விழுந்துதொழிலாளி உயிரிழப்பு

புதுக்கடையில் சாலையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

புதுக்கடையில் சாலையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

புதுக்கடை, அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பிரதீஷ் (27). கூலித் தொழிலாளியான இவா் இதய நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு புதுக்கடை பேருந்து நிலையம் அருகே நடந்துசென்ற அவா், திடீரென மயங்கி விழுந்து இறந்தாா்.

புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com