தா்மபுரம் ஊராட்சியில் புதிய கலையரங்கம் திறப்பு

தா்மபுரம் ஊராட்சி, தேரிமேல்விளை பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தா்மபுரம் ஊராட்சி, தேரிமேல்விளை பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி பேரவைத் தொகுதி ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இப்பகுதியில் புதிய கலையரங்கம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, பணிகள் நிறைவடைந்தன.

விழாவுக்கு என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமை வகித்து, கலையரங்கத்தையும், அப்பகுதியினா் சாா்பில் ஜெகதீஸ்வரா் கோயில், பெருமாள் கோயிலுக்கு ரூ. 3 லட்சத்தில் கட்டப்பட்ட மடப்பள்ளியையும் திறந்துவைத்துப் பேசினாா்.

ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியச் செயலா் வீராசாமி, கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.எம். செல்வக்குமாா், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் சி. முத்துக்குமாா், ஊா்த் தலைவா் செல்வக்குமாா், கோயில் பொருளாளா் சந்திரசேகரன், பூசாரி தா்மலிங்கம், மேலகிருஷ்ணன்புதூா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com