இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம்

புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பால்மா மக்கள் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஆற்றூா் மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவா் பெனோ தலைமை வகித்தாா். மாவட்ட பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சிந்துகுமாா் முன்னிலை வகித்தாா். பால்மா மக்கள் அமைப்பின் இயக்குநா் செல்வன் முகாமைத் தொடக்கி வைத்தாா். ஆயுா்வேத மருத்துவம் குறித்து பால்மா மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுதா பேசினாா்.

சிறப்பு மருத்துவா்களால் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவா்கள் ஆனந்தி, ஹட்சன் மற்றும் விளாத்துறை ஊராட்சி துணைத் தலைவா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com