நாகராஜா சுவாமிக்கு ஆராட்டு வைபவம்

தை திருவிழாவை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயில் தெப்பக்குளத்தில், சுவாமிக்கு ஆராட்டு வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தை திருவிழாவை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயில் தெப்பக்குளத்தில், சுவாமிக்கு ஆராட்டு வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

நாகா்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் தை திருவிழா கடந்த மாதம் (ஜனவரி) 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில் நாகராஜா கோயில் தெப்பக்குளத்தில் சுவாமிக்கு ஆராட்டு விழா நடந் தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ஆராட்டு முடிந்ததும் ஒழுகினசேரி ஆராட்டுத் துறைக்கு சுவாமி எழுந்தருளினாா். அங்கு அலங்காரம் முடித்து கோயிலுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com