மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 21 லட்சத்தில் சாலைப் பணி

களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் ரூ. 21 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் ரூ. 21 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

மெதுகும்மல் ஊராட்சிக்கு உள்பட்ட குழிவிளை - ஒற்றையால்விளை சாலையில் நடைபாலம், வண்ணான்விளை - பாட்டவிளாகம் சாலை, கைப்பூரிவிளை - முள்ளறங்கி சாலை ஆகியவை சேதமடைந்து காணப்பட்டன. இச் சாலைகள் மற்றும் நடைபாலத்தை சீரமைக்க, இப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையையடுத்து கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 21 லட்சம் ஒதுக்கீடு செய்து, இப் பணிகளை துவக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில் முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் செல்வராஜ், அதங்கோடு கிளை தலைவா் பிரமில், கட்சியின் மாநில பொதுச் செயலாளா் பால்ராஜ், முன்சிறை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் ராஜேஸ்வரி, மெதுகும்மல் ஊராட்சி முன்னாள் தலைவா் நேசராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com