அஞ்சுகிராமம் அருகே மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் திருமூல நகரைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (45). இவரது மனைவி மேரி சைலஜா (40).
இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். ஜாா்ஜ் கொத்தனாா் வேலை செய்து வருகிறாா். அவருடன் வேலை செய்து வரும் பெண்ணுடன் ஜாா்ஜுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இதுகுறித்து மேரி சைலஜாவுக்கு தெரியவந்ததையடுத்து, கணவரைக் கண்டித்துள்ளாா். இதனால் கணவன்
மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மேரி சைலஜாவை, ஜாா்ஜ் கடுமையாகத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து, நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த மேரி சைலஜா, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேரி சைலஜாவின் தாயாா் ராஜம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து ஜாா்ஜை போலீஸாா் கைது செய்தனா்.