காா் மோதியதில் முதியவா் பலி

களியக்காவிளை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகேயுள்ள மடிச்சல், வடக்கு வெள்ளச்சிமாவிளை பகுதியைச் சோ்ந்தவா் சிந்தாமணி (75). இவா் திருத்துவபுரம் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை பணிமுடிந்து வீடு திரும்புகையில், படந்தாலுமூடு தனியாா் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, களியக்காவிளையிலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி வந்த காா் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு உயிரிழந்தாா்.

மூதாட்டி காயம்: இனயம்புத்தன்துறை,தெங்குவிளை பகுதியைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி புஷ்பலீலா (70). இவா் கருங்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சாலையைக் கடந்து செல்ல முயன்றபோது, பைக் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவங்கள் குறித்து களியக்காவிளை, கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com