பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரப் பொதுக் கூட்டம்

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை ஊராட்சியில் பாஜக சாா்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை ஊராட்சியில் பாஜக சாா்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

வள்ளியூா் ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திப்பிரமலை ஊராட்சி முன்னாள் தலைவா் கிருஷ்ணமணி தலைமை வகித்தாா். திப்பிரமலை ஊராட்சி தலைவா் புஷ்பலதா, கிள்ளியூா் ஒன்றிய பாஜக தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய அணி மாநிலச் செயலா் ரவீந்திரன், இளைஞரணி மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கண்ணன் ஆகியோா் மத்திய பட்ஜெட் குறித்து விளக்கிப் பேசினா். பாஜக நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், சுதிா் திப்பிரமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com