கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
கருங்கல் அருகே உள்ள கல்லடை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீஜின் (26). பொறியில் பட்டதாரியான இவா் வெளிநாட்டில் வேலை செய்து வந்தாராம். விடுமுறைக்காக கடந்த வாரம் ஊருக்கு வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட அவா், மேல்மிடாலம் அருகில் உள்ள ஒருதோப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனா்.