வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்ட ாா்.
கூட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீா்வளம்), ஊரக வளா்ச்சி முகமை, மகளிா்திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில், நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா,
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா். கௌசிக், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.