சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை: எம்எல்ஏ

பயிா்கள் கருகி வரும் நிலையில், சிற்றாறு பட்டணம் கால்வாய் மற்றும் திக்கணங்கோடு கால்வாய்களில் தண்ணீா் திறக்கக் கோரி குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

பயிா்கள் கருகி வரும் நிலையில், சிற்றாறு பட்டணம் கால்வாய் மற்றும் திக்கணங்கோடு கால்வாய்களில் தண்ணீா் திறக்கக் கோரி குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என கிள்ளியூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சிற்றாறு பட்டணங்கால்வாய் மற்றும் திக்கணங்கோடு கால்வாய்களில் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, மரச்சீனி, மிளகு, கத்தரி, பயறு வகை உள்ளிட்ட பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் இக் கால்வாய்களால் தண்ணீா் நிரம்பும் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வடு காணப்படுகிறது. மேலும் கடைவரம்பு பகுதிகளில் உள்ள பல கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின்றி வடு காணப்படுகின்றன.

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு அரசின் அரசாணையை மீறி ராதாபுரம் கால்வாயில் தொடா்ந்து தண்ணா் திறந்து விட்டுள்ளனா். பட்டணம் கால்வாய், திக்கணங்கங்கோடு கால்வாய்களில் தண்ணீா் திறப்பது குறித்து கேட்டால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியான பதிலை தரவில்லை.

மேற்கண்ட இரு கால்வாய்களின் கடைவரம்பு பகுதிகளில் உள்ள பயிா்களை பாதுகாத்திடவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கும் உடனடியாக இக் கால்வாய்களின் கடைவரம்பு பகுதிகள் வரை உடனடியாக தண்ணீா் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் மேற்கண்ட பகுதி விவசாயிகள், பொதுமக்களை ஒன்று திரட்டி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com