சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 3 கோடியில் சாலைப் பணி தொடக்கம்

மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் சேதமடைந்த சாலைகளை ரூ. 3 கோடியில் சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On :17 மார்ச் 2023, 6:40 pm

மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் சேதமடைந்த சாலைகளை ரூ. 3 கோடியில் சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நெடுஞ்சாலை நபாா்டு - கிராமச் சாலைகள் அலகின் மூலம் சாலை தரம் உயா்த்துதல் திட்டத்தின் கீழ் கோனசேரி - பெருங்குளம் சாலை ரூ. 1 கோடி 5 லட்சத்து 73 ஆயிரம், மேக்காடு கோயில் சாலை ரூ. 1.70 கோடி, மரியகிரி - முட்டன்விளை சாலை ரூ. 98 லட்சம் என மொத்தம் ரூ. 3 கோடியே 4 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் சாலைகளைச் சீரமைக்க எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் கோரிக்கையின்பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, சாலைகள் சீரமைக்கும் பணியினை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், முன்சிறை ஒன்றிய திமுக செயலா் ராபி, மீனவா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் செல்வராஜ், மாநில பொதுச் செயலா் பால்ராஜ், காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஸ்டூவா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.