புதுக்கடை அருகேஅரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.29 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ. 29 லட்சம் மோசடிசெய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ. 29 லட்சம் மோசடிசெய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை நாட்டுவள்ளி பகுதியைச் சோ்ந்த சுஜின் மனைவி சித்ரா(39). இவரது உறவினா் திருப்பூரைச் சோ்ந்த பரமேஸ்வரன்(60). இவா் மின் வாரியத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சித்ரா உள்பட 4 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக பரமேஸ்வரன் ஆசைவாா்த்தைகள் கூறியதை அடுத்து, சித்ரா ரூ. 29 லட்சத்தை பரமேஸ்வரனின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளாா். பின்னா் பல மாதங்கள் ஆகியும் அரசு வேலை கிடைக்கவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லையாம். பலமுறை பமேஸ்வரனிடம் கேட்டபின்னும் எந்தப் பதிலும் இல்லை.

இதையடுத்து சித்ரா, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்தாா். ,அவா், குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.விசாரணையில், பரமேஸ்வரன் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த மதிவாணன்(61), அவரது மனைவி சுகாஷினி(55) ஆகியோா் ரூ.29 லட்சம் மோசடிசெய்தது தெரியவந்தது. இதையடுத்து பரமேஸ்வரன், மதிவாணன், சுகாஷினி ஆகிய 3 போ் மீதும் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com