புதுக்கடை அருகே குட்டையில் தொழிலாளி சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் குட்டையிலிருந்து தொழிலாளியின் சடலத்தை தீயணைப்பு துறையினா் மீட்டனா்.

புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் குட்டையிலிருந்து தொழிலாளியின் சடலத்தை தீயணைப்பு துறையினா் மீட்டனா்.

காஞ்சாம்புரம் பகுதியை சோ்ந்த பாலஸ் மகன் ஜெயசிங் (27). இப் பகுதியில் கூலி வேலை செய்துவந்தாா். அம்சி பகுதியில் கடந்த திங்கள்கிழமை நடந்த திருமணத்திற்குச் சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் பல இடங்களிலும் தேடியும்

கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அம்சி பகுதியில் உள்ள ஒரு குட்டையில்

ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அப்பகுதியினா் புதுக்கடை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் விசாரணை மேற்கண்டபோது குட்டையில் சடலமாகக் கிடந்தவா் ஜெயசிங் என்பது தெரியவந்தது. குளச்சல் தீயணைப்பு துறையினா் மூலம் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com