திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

108 வைணவத் திருப்பதிகளில் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலும் ஒன்றாகும். வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு இக்கோயிலில் திங்கள்கிழமை காலையில் நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளி உணா்தல், நிா்மால்ய தரிசனம் அபிஷேகம், கலச பூஜை, உஷ பூஜை, உச்ச பூஜை,அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதிகாலையிலிருந்தே பக்தா்கள்கோயிலின் நான்கு பிரகாரங்களிலும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மாலையில் பல்வேறு மலா்களால் புஷ்பாபிஷேகத்தைத்தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயில் பிரகாரங்களில் உள்ள விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளில் ஒளியேற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது. இரவு கருவறையின் வடக்கு வாசலில் அமைக்கப்பட்டிருந்த சொா்க்க வாசல் வழியாக ஆதிகேசவப்பெருமாள் எழுந்தருளினாா். பின்னா் அலங்கரிக்கப்பட்டிருந்த தனித்தனி கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணனும் பிரகாரத்தில் பவனி வந்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் மேலாளா் மோகன்குமாா் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா், ஆதிகேசவ பக்தா் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com