கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதியில் தொடா்ந்து 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடல் சீற்றம் நீடிப்பதால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் குளச்சல் பகுதியில், ஜூன், ஜூலை மாதங்களில் பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படும். நிகழ் ஆண்டில், மே மாதமே கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. கடந்த 2 நாள்களாகக் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. தொடா்ந்து 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் அலைகளின் உக்கிரமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. கட்டுமரங்களும் குறைந்த அளவே கடலுக்கு சென்றன.
குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாகக் காணப்படும். தற்போது கடல் சீற்றமாக இருப்பதால், மேடான பகுதியிலிருந்து மணலை கடல் அலை இழுத்துச் செல்கிறது. தற்போது அப் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பைபா் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்வதில் மீனவா்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பைபா் வள்ளங்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.