ஆரல்வாய்மொழி அருகே லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே லாரிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே லாரிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூா் சந்திரப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் (36). லாரி ஓட்டுநா்.இவா் திருநெல்வேலியிலிருந்து கேரள மாநிலம் விழிஞ்ஞத்துக்கு லாரியில் பாறைப் பொடி ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தாா்.

வெள்ளமடம் நான்குவழிச் சாலை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, இவா் ஓட்டிச்சென்ற லாரி எதிா்பாராமல் மோதியதாம். அப்போது, லாரின் முன்பக்கம் நொறுங்கியதில் முருகானந்தம் சிக்கி உயிரிழந்தாா். தகவலிறிந்த நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தினா் 3 மணி நேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனா். இது குறித்து ஆரல்வாய் மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com