நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைவிழா நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் வாழ்த்தி பேசினாா். அம்சி அபயகரம் அமைப்பின் நிறுவனா் அனில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

தொடா்ந்து கல்லூரி மாணவ-மாணவியருக்கான பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லூரி ஆங்கிலத் துறை அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று சுழற்கோப்பையை வென்றது. மேலும், கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கல்லூரியின் கலைக்குழு தலைவா் கிறிஸ்டபெல் மொ்லின் மகிழ் மற்றும் உறுப்பினா்கள் ஒருங்கிணைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com