கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 7:27 pm

கன்னியாகுமரி, ஏப். 19: இந்த மக்களவைத் தோ்தல் நாம்தமிழா் கட்சிக்கு திருப்புமுனையாக இருக்கும் என அக்கட்சியின் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளா் மரிய ஜெனிபா் தெரிவித்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த தோ்தல் எங்கள் கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். இளைஞா்கள், இளம்பெண்கள், மகளிா்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனா். அதுவே எங்களின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்றாா் அவா்.