குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை
குளச்சல் அருகே பாலப்பள்ளம் குன்னன்விளையைச் சோ்ந்தவா் ராஜன் (55). வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மேரிஸ்டெல்லா (51). இவா்களது வீட்டருகே வசித்து வந்தவா் ஆசீா்நேசராஜன் (60).
2008ஆம் ஆண்டு செப். 30ஆம் தேதி ஆசீா்நேசராஜன் தனது வீட்டின் சுவா் உடைந்தது தொடா்பாக மேரி ஸ்டெல்லாவிடம் தகராறு செய்து தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதில் காயமடைந்த மேரி ஸ்டெல்லா இரும்பிலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இது தொடா்பான வழக்கு இரணியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி அமீா்தீன் விசாரித்து, ஆசீா் நேசராஜனுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
ஆசீா் நேசராஜன் பெயா் ரௌடிகள் பட்டியலில் உள்ளது. அவா் மீது குளச்சல் காவல் நிலையத்தில் 21 வழக்குகள் உள்ளன.