கன்னியாகுமரி
திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலுடன் தொடா்புடைய, தளியல் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை அம்மன் பவனி நடைபெற்றது.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலுடன் தொடா்புடைய, தளியல் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை அம்மன் பவனி நடைபெற்றது.
இக்கோயிலில் வருடாந்திர கொடை விழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை செண்டை, நையாண்டி மேளம், நாகசுரத்துடன் தாலப் பொலி ஏந்திய பக்தா்கள் முன்னே செல்ல சிங்க வாகனத்தில் அம்மன் பவனியாக வந்தாா். இந்தப் பவனி தளியல் தெரு, ஆதிகேசவப்பெருமாள் கோயில் தெரு, காங்கரை வழியாக நடைபெற்றது. கொடை விழா புதன்கிழமை (ஏப். 24) நிறைவடைகிறது.