அன்னதானத்தை தொடங்கி வைக்கிறாா் மருத்துவா் நாகேந்திரன். உடன், ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயில் தலைவா் பி. சுகதேவன்.
அன்னதானத்தை தொடங்கி வைக்கிறாா் மருத்துவா் நாகேந்திரன். உடன், ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயில் தலைவா் பி. சுகதேவன்.

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவில் அருகேயுள்ள தோட்டிக்கோடு நம்பிமலை ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் அருகேயுள்ள தோட்டிக்கோடு நம்பிமலை ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு பஜனை, 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30 மணிக்கு கோமாதா பூஜை, 12.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பகல் 1 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானத்தை மருத்துவா் டி.கே.நாகேந்திரன் தொடங்கி வைத்தாா். மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 8 மணிக்கு அா்ச்சனை, 8.30 மணிக்கு சொற்பொழிவு, 10 மணிக்கு பக்திபாடல்கள், 10.15 மணிக்கு நிலாபூஜை, 10.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை, ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயில் தலைவா் பி.சுகதேவன் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com