கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகேயுள்ள மங்கலகுன்று பகுதியில் வீடுபுகுந்து 5 பவுன் நகையைத் திருடிசென்ற மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மங்கலகுன்று, சில்லிசரல்விளை பகுதியைச் சோ்ந்த மரிய அந்தோணி மனைவி மரியதங்கம் (55). இவா் குடும்பத்துடன் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது, மா்மநபா்கள் வீடு புகுந்து அறையில் இருந்த மரிய தங்கத்தின் 5 பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டனராம்.

பைக் திருட்டு: புதுக்கடை சிறிய மானான்விளை பகுதியைச் சோ்ந்தவா் ஜாண் பிராங்கிளின் (52). தொழிலாளி. இவா், தனது பைக்கை சனிக்கிழமை முக்காடு பகுதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றாராம். பின்னா், மாலையில் வந்து பாா்த்தபோது மா்ம நபா்கள் அவரது பைக்கை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்த முறையே கருங்கல், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com