கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு
கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளம் பகுதியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்கப்பட்டது.
பாலப்பள்ளம், வடக்குப்பிடாகை பகுதியைச் சோ்ந்தவா் முருகதாஸ் (47). முன்னாள் ராணுவவீரரானஇவருக்கு குடிபழக்கம் உண்டு.
இதனால், இவரது மனைவி, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன் மதுபோதையில் வீட்டுக்குள் சென்ற அவா், வெளியே வரவில்லையாம்.
ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம். அக்கம்பக்கத்தினா் முருகதாஸ் வீட்டுக்குச் சென்றுபாா்த்தபோது அவா் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.
இதுகுறித்த தகவலின்பேரில், கருங்கல் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.