கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

கன்னியாகுமரி கடலில் இயக்கப்படும் பொதிகை சுற்றுலாப் படகு பராமரிப்புப் பணிக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டது.
 பொதிகை படகு (கோப்புப்படம்).
பொதிகை படகு (கோப்புப்படம்).

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் இயக்கப்படும் பொதிகை சுற்றுலாப் படகு பராமரிப்புப் பணிக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடலில், இருவேறு பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவை அமைந்துள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பாா்வையிட வசதியாக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறை சீசனையொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படும் பொதிகை படகை சீரமைக்க பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

இதைத் தொடா்ந்து பொதிகை படகு, கன்னியாகுமரியில் உள்ள பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்தப் படகு கரையேற்றப்பட்டு திங்கள்கிழமை சீரமைக்கும் பணி தொடங்கியது.

சீரமைக்கும் பணி சில தினங்களில் நிறைவடையும் எனவும் இதையடுத்து இப்படகு புதுப்பொலிவுடன் வெள்ளோட்டம் விடப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com