சிறப்பிடம் பெற்ற அணிக்கு பரிசு வழங்குகிறாா் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் மரிய ஜெனிபா்.
சிறப்பிடம் பெற்ற அணிக்கு பரிசு வழங்குகிறாா் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் மரிய ஜெனிபா்.

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கான பரிசுகளை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நாம்தமிழா் வேட்பாளா் மரிய ஜெனிபா் வழங்கினாா்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கான பரிசுகளை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நாம்தமிழா் வேட்பாளா் மரிய ஜெனிபா் வழங்கினாா்.

கன்னியாகுமரி அலங்காா் லெவன் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி 3 நாள்கள் நடைபெற்றது. இதில்,மொத்தம் 25 அணிகள் பங்கேற்றன.

இப்போட்டில் முதல் பரிசு பெற்ற புதுக்கிராமம் ஸீ போ்ட்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற அலங்காா் லெவன் ஸ்டாா் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், மூன்றாம் பரிசு பெற்ற பெருவிளை அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், நான்காம் பரிசு பெற்ற அலங்காா் லெவன் ஸ்டாா் பி அணிக்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் பரிசுகளாக வழங்கப்பட்டது.

இதற்கான பரிசளிப்பு விழாவில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரிய ஜெனிபா் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கிரிக்கெட் கிளப் நிா்வாகிகள் ஜோ, நிசாந்த், கிராஸ், ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com