கன்னியாகுமரி
குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு
கன்னியாகுமரியில் கோடை வெயிலில் பணியாற்றும் போலீஸாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கோடை வெயிலில் பணியாற்றும் போலீஸாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
கன்னியாகுமரி காவல் நிலைய ரவுண்டானாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு தொடங்கி வைத்தாா்.
அப்போது, கன்னியாகுமரி உள்கோட்டத்துக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு, மோா் கோடை வெயிலின் தாக்கம் முடியும் வரை தொடா்ந்து வழங்கப்படும் என்றாா்.